அட்டாளைச்சேனையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!

அ.றஹ்மான்

ட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வளைவில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மரணமடைந்தவர் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :