முஸ்லிம்களை தொடர்ச்சியாக உள ரீதியாக காயப்படுத்தி வரும் பொது பல சேனா அமைப்பு தற்போது எல்லை மீறி குர் ஆன் பற்றிய அவதூறுகளை பரப்ப ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் இதற்கெதிராக நாளை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதன் மூலம் தமது போராட்டத்தை ஆரம்பிக்க கொழும்பில் முஸ்லிம்கள் இணக்கம் கண்டுள்ளனர்.
நேற்று மாலை கொழும்பில் கூடிய ஜம்மியத்துல் உலமா மார்க்க அறிஞர்கள், புத்தி ஜீவிகள், சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் மட்டத்தில் இம்முடிவுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதோடு நாளை சட்டத்தை நாடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.
அல்-குர்ஆன் மற்றும் இஸ்லாம் தொடர்பான அவதூறுகளை மேற்கொண்டு வரும் பொது பல சேனா அமைப்பின் இனவாதி ஞானசாரவுக்கு எதிராக சாதாரண குடிமக்களும் வழக்குப் பதிவு செய்ய முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள வழக்கறிஞர்கள் முஸ்லிம்கள் பெருமளவில் வழக்குகளை பதிவு செய்வதில் எந்தத் தவறுமில்லையென சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் நாளை பல பக்கங்களிலிருந்தும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு உலமாக்கள், இளைஞர்கள் உட்பட புத்தி ஜீவிகளும் தயாராகி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.சோ
0 comments :
Post a Comment