அட்டாளைச்சேனை லொயிட்ஸ் பஸ் கல்முனையில் விபத்து : 3பேர் பலி பலர் படுகாயம் - படங்கள்



எம். வை. அமீர், எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில், கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இன்று அதிகாலை (13) ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் பாரிய வீதிவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஒரு பெண் உட்பட இருவர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதுடன், பலர் பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்றும், கல்முனை வவுனியா லேலன்ட் பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதிக்கொண்டது. மேற்படி விபத்தில் இரு பஸ்களும் முன்பகுதி முற்றாக சேதமடைந்த நிலையில் உள்ளதுடன் கல்முனை வவுனியா லேலன்ட் பஸ்ஸில் சாரதியின் இருக்கைக்கு அருகில் மதுபானத்துடனான போத்தலும் காணப்பட்டது. மதுபோதையில் அந்த பஸ் சாரதி பயணம் மேற்கொண்டிருக்கலாம் என கல்முனை பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.எம். கப்பார் உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :